Free Register
உங்கள் வரனை இலவசமாக பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். பெண்களுக்கு முற்றிலும் இலவசம்.

திருமணத்தின் போது அக்னியை சுற்றி வருவது ஏன்?

இந்து திருமணங்களில் மிகவும் முக்கியமான சடங்குகளில் ஒன்று அக்னியை சுற்றி வருவது. இந்த சடங்கை 'சப்தபதி' என்று கூறுகிறார்கள். அதாவது, ஏழு அடிகள் என்பது மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் ஒன்றாக சேர்ந்து நடக்கின்ற செயலாகும். இந்த ஏழு அடிகள் நடப்பதற்கு பின்னால் ஆழமான ஆன்மிக மற்றும் சமூக அர்த்தங்கள் உள்ளன. இதன் பின்னணியில் உள்ள காரணத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? நித்ரா மேட்ரிமோனி மூலமாக உங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்யவது மட்டும் அல்லாமல், இந்த மாதிரியான திருமண மரபுகளின் அழகையும் புரிந்துகொள்ளலாம்!

ஏன் அக்னியை சுற்றி வருகிறோம்?

புதிய தொடக்கம்: அக்னி என்பது புனிதமானது மற்றும் புதிய தொடக்கத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. திருமணம் என்பது ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கம் என்பதால், அக்னிச் சுற்றி வருவதன் மூலம் இந்த புதிய தொடக்கத்தை குறிக்கிறது.

இறைவனின் சாட்சியில்: அக்னி என்பது இறைவனின் பிரதிநிதியாக கருதப்படுகிறது. எனவே, அக்னிச் சுற்றி வருவதன் மூலம், இறைவனின் சாட்சியில் இந்த திருமண உறவை பிரதிபலிக்கிறது.

ஏழு வாழ்க்கை நோக்கங்கள்: திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பது, வாழ்க்கையின் ஏழு முக்கிய நோக்கங்களை பிரதிபலிக்கிறது. இது நம் வாழ்க்கையை புனிதமாகவும் சமநிலையாகவும் வைக்க உதவும் ஒரு ஆன்மீக அறிகுறியாகும்.

பொறுப்புணர்வு: அக்னிச் சுற்றி வருவதன் மூலம், தம்பதியர் ஒருவருக்கொருவர் பொறுப்புணர்வுடன் இருப்பதாகவும், வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருப்பதாகவும் உறுதியளிக்கப்படுகின்றன.

அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பதற்கான காரணங்கள்

முதல் அடி: பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.

இரண்டாம் அடி: ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உறுதிமொழி.

மூன்றாம் அடி: நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும் என்ற வேண்டுகோள்.

நான்காவது அடி: சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.

ஐந்தாவது அடி: ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற உறுதிமொழி.

ஆறாவது அடி: குழந்தை பாக்கியம் வேண்டும் என்ற வேண்டுகோள்.

ஏழாவது அடி: குடும்ப உறவுகள் மற்றும் பாசங்களின் நலனைப் பாதுகாத்தல்.

அக்னியின் முக்கியத்துவம்

அக்னி ஒரு புனித சக்தியாக பார்ப்பதால், இது வாழ்க்கை முழுவதும் மணமக்கள் எடுக்கிற உறுதிகளை சாட்சியாக நிற்கிறது. அக்னியைச் சுற்றி நடப்பதால், அவர்கள் உறவிற்கு ஒரு புனிதமான தொடக்கம் கிடைக்கிறது.

இந்த ஏழு அடிகள், மணமக்களின் மனதில் ஒரு ஆன்மீக பந்தத்தை உருவாக்குகிறது. அது வாழ்வின் மகத்தான அம்சங்களை புரிந்து, அதற்காக இணைந்து வாழ அனுமதிக்கிறது.

முடிவுரை

இந்த மாதிரியான பாரம்பரிய திருமண முறைகள் நம் கலாசாரத்தின் பெருமையை காட்டுகின்றன. உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சரியான இடத்தைத் தேடுகிறீர்களா? நித்ரா மேட்ரிமோனி உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சரியான துணையை தேர்ந்தெடுக்க உதவுகிறது.


reasons for going around agni during a wedding


Our Nithra Matrimony App

Nithra Matrimony is one among the best matrimonial service you could find, very simple and easiest one so far to get a better soulmate for your life, and it is user friendly and designed precisely for all the Tamil people who are searching for a partner, they can find out their ally from the matched list reliant on their bias. Use our Nithra Matrimony App to keep track of your beloved spouse hunt.