Free Register
உங்கள் வரனை இலவசமாக பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். பெண்களுக்கு முற்றிலும் இலவசம்.

2024 ஆங்கில புத்தாண்டு பலன்கள்-ரிஷபம் ராசி

முன்னுரை:

♉ எதிலும் பொறுப்புடனும், அன்புடனும் செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே..!பிறக்கின்ற ஆங்கில வருடப் புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புக்கு ஏற்ப வாழ்க்கையில், இனி வரப்போகின்ற நாட்களில் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்வோம்..! ரிஷப ராசிக்காரரான உங்களுக்கு இன்னும் திருமண வரன் அமையவில்லையா? இனி ஏன் இந்தக் கவலை..நமது நித்ரா மணமாலையில் வரன் பதிவு செய்யுங்கள்!!அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணம் புரிந்து உங்கள் துணையுடன் இன்பமாக வாழுங்கள்!!

ரிஷப ராசி:

♉ திட்டமிட்டுச் செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்.

♉ மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் சோர்வு உண்டாகும்.

♉ திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். வர்த்தக துறைகளில் எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். தனம் சார்ந்த விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். வாகன மாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். கூட்டுத் தொழிலில் விவேகத்துடன் செயல்படவும். பிரிந்து சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.

♉ நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குணநலன்களில் மாற்றம் ஏற்படும். கல்லூரி பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும்.

♉ நுட்பமான சில விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள்.

உடல் ஆரோக்கியம்:

♉ உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். கொழுப்பு சார்ந்த உணவுகளைக் குறைத்துக் கொள்ளவும். தினமும் மூச்சுப் பயிற்சிகள் செய்வது நன்மையைத் தரும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். இறை சார்ந்த சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது மனதிற்கு அமைதியையும், புத்துணர்ச்சியையும் தரும். நீண்ட நேரம் கண்விழிப்பதைக் குறைத்துக் கொள்ளவும்.

பெண்கள்:

♉ மனதில் எதையும் சமாளிக்க முடியும் என்ற தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் மேம்படும். விருப்பமான சில ஆசைகளால் மனதளவில் புதிய அனுபவம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். பாகப் பிரிவினை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சூழ்நிலை அறிந்து கருத்துகளைப் பகிரவும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை அமையும்.

மாணவர்கள்:

♉ மாணவர்களுக்கு புதிய மாற்றங்களின் மூலம் மதிப்பெண்களும், புரிதலும் அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆசிரியர்களுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். உயர் கல்வியில் இருந்துவந்த தடைகள் விலகும். குடும்பத்தில் போட்டி மனப்பான்மையைக் குறைத்துக் கொள்ளவும். கவர்ச்சியான விஷயங்களில் மனதினை செலுத்தாமல் இருக்கவும்.

உத்தியோகஸ்தர்கள்:

♉ உத்தியோகப் பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில்நுட்பத் துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த சில ஆர்வமின்மையான சூழல் மறையும். சீருடை பணிகளில் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு மதிப்பளித்துச் செயல்படுவது நல்லது. நுட்பமான பேச்சுக்களின் மூலம் மதிப்பு மேம்படும். உத்தியோகத்தில் செய்யும் முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் சிறு அனுபவத்திற்குப் பின்பு கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வேலைவாய்ப்புகள் அமையும்.

வியாபாரிகள்:

♉ வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். முயற்சிகளை அதிகப்படுத்துவதன் மூலம் லாபம் அதிகரிக்கும். மனசாட்சியின் அடைப்படையில் வியாபாரத்தை நடத்தவும். கைபேசி மற்றும் புதிய தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் மீதான முதலீடுகள் மேம்படும். நீண்ட நாட்களாக தடைபட்ட சில ஒப்பந்த வியாபாரங்கள் கைகூடும். கனிம வளம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.

கலைஞர்கள்:

♉ கலைத்துறையில் இருப்பவர்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். வித்தியமான குரல் பயிற்சிகளில் ஆர்வம் ஏற்படும். சமூகம் மீதான கண்ணோட்டத்தில் மாற்றம் உண்டாகும். அரசு வகையில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். இசைத் துறைகளில் சில நுட்பமான விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். ஓவியம் மற்றும் இலக்கியம் சார்ந்த பணிகளில் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள்:

♉ சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் மேம்படும். நுட்பமான சில சிந்தனைகளின் மூலம் விருப்பமானதை நிறைவேற்றி கொள்வீர்கள். குடும்பத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகள் மனதில் மேம்படும். குதர்க்கமான விவாத சிந்தனைகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்திருந்த சில புதிய பொறுப்புகள் கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.

வழிபாடு:

♉ வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபட சிந்தனைகளில் தெளிவும், மனதளவில் புத்துணர்ச்சியும் உண்டாகும்.

முடிவுரை:

♉ மேற்கண்ட அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் யாவும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப கிடைக்கும். இவை அனைத்தும் ரிஷபம் ராசிக்காரர்களுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான பொதுவான ராசி பலன்களே ஆகும். திருமணம் என்பது ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கான ஒரு புனிதமான நிகழ்வாகும். ரிஷப ராசியில் பிறந்தவர்களே!! உங்களுக்கான வரன்களை காண இன்றே நித்ரா மணமாலையில் இலவசமாக வரன் பதிவு செய்து, உங்கள் எதிர்க்காலத்தவரோடு இணைந்து வாழ்க்கையில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குங்கள்!!


matrimony registration

Our Nithra Matrimony App

Nithra Matrimony is one among the best matrimonial service you could find, very simple and easiest one so far to get a better soulmate for your life, and it is user friendly and designed precisely for all the Tamil people who are searching for a partner, they can find out their ally from the matched list reliant on their bias. Use our Nithra Matrimony App to keep track of your beloved spouse hunt.
Christian - Caste
By Profession
By City
By State
By Education
By Marital Status
By Dosham
Second Marriage By Caste
Divorcee By Caste
Divorcee By Location
Second Marriage By Location