தமிழ்நாட்டின் சிறந்த 10 திருமண போட்டோஷூட் இடங்கள்!
Table of Contents
முன்னுரை
பண்பாடும், வரலாறும், இயற்கை அழகும் சூழ்ந்த தமிழ்நாடு, திருமண புகைப்படங்களுக்கான மிகச் சிறந்த இடங்களை வழங்குகிறது. இந்த இடங்கள் தம்பதியினரின் காதலையும் ஒன்றிணைவையும் அழகாக பதிவு செய்ய, புகைப்பட கலைஞர்களுக்கு சிறந்த களமாக திகழ்கின்றன. இதோ, திருமண புகைப்படங்களுக்கு ஏற்ற தமிழ்நாட்டின் முதல் 10 இடங்களின் குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம் வாருங்கள்!! உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர் உறவினருக்கோ வரன் தேடுகிறீர்களா? இன்றே நித்ரா மேட்ரிமோனியில் வரன் பதிவு பண்ணுங்க!! அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணத்தை முடியுங்கள்.
சிறந்த திருமண போட்டோஷூட் இடங்கள்
மகாபலிபுரம்பழமையான கடலோரக் கோவில்களும் சிற்பங்களும் நிறைந்த மகாபலிபுரம், வரலாற்று சிறப்புமிகு பின்னணியாக திகழ்கிறது. காதல் மற்றும் ஒன்றிணைவு என்பது கல்லால் ஆன சிற்பங்களைப் போன்று காலம் தாண்டிய சாச்சியமாக இந்த இடம் திகழ்கிறது. உங்கள் திருமணப் புகைப்படங்கள் எடுப்பதற்கு இது ஒரு நல்ல தேர்வாகும்.
ஊட்டிநீலகிரி மலைகளில் அமைந்துள்ள ஊட்டி, 'மலைகளின் ராணி' என்ற புகழ்பெற்றது. பூங்காக்கள், பிரிட்டிஷ் காலனிய கட்டிடக் கலையும், மணிக்கும் ஏரிகளும் இதை கனவு காணும் இடமாக்குகின்றன. குளிர் நிறைந்த இந்தப் பகுதியில் புகைப்படம் எடுப்பது வித்தியாசமான உணர்வைக் உங்களுக்குக் கொடுக்கும்.
கொடைக்கானல்மூடுபனி சூழ்ந்த கொடைக்கானலின் காட்டுப்பகுதிகள், மந்தாரமான அருவிகள், நட்சத்திர வடிவ ஏரி ஆகியவை இயற்கையின் அழகு மற்றும் மர்மத்தை பிரதிபலிக்கும். ஜில்னெஸ் நிறைந்திருக்கும் இந்தப் பகுதியும் புகைப்படங்களுக்கு ஏற்றவை.
புதுச்சேரிபுதுச்சேரியின் பிரெஞ்சு காலனியாலயங்களும், அழகிய கடற்கரைகளும் தமிழ் மற்றும் பிரெஞ்சு காலனிய வரலாற்றின் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றன. இந்த சாலைகளும் அமைதியான கடலோர நடைபாதைகளும் புகைப்படத்துக்கு பலவிதமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
மதுரைமீனாட்சி அம்மன் கோவிலுடன் கூடிய மதுரை நகரம் ராஜ புகைப்படங்களுக்கு உரிய பின்னணியாக விளங்குகிறது. கோவில் கோபுரங்களின் சிக்கலான செதுக்குதலும், பிரம்மாண்டமான நடைபாதைகளும் கலாச்சார மகத்துவத்தை பிரதிபலிக்கின்றன. மல்லிகை மணக்கும் மதுரையில் உங்கள் திருமணப் புகைப்படங்கள் எடுப்பதற்கு ஏராளமான நல்ல இயற்கையுடன் கூடிய பகுதிகள் உள்ளன.
ராமேஸ்வரம்ராமேஸ்வரம் ஒரு புனித யாத்திரைக் கேந்திரம் மட்டுமல்ல, தெளிவான நீலக்கடலும், வானம் கலக்கும் அழகிய கடற்கரைகளும் கொண்ட ஒரு அமைதியான இடமாகும். பம்பன் பாலமும், சாந்தமான கடற்கரைகளும் திருமண நிகழ்வுகளின் புனிதத்தை பதிவு செய்ய உகந்தது.
குன்னூர்ஊட்டியைப் போன்றே குன்னூர் அதன் தேயிலைத் தோட்டங்களும், அழியாத பசுமையான இடங்களும் கொண்டுள்ளது. மறைந்துள்ள அருவிகளும், மூடுபனி சூழ்ந்த இடங்களும் இனிமையான மற்றும் உண்மையான புகைப்படங்களுக்கு ஏற்றவையாகும்.
செட்டிநாடுசெட்டிநாடு, செட்டியார்களின் ஆச்சரியத்தை பிரதிபலிக்கும் இடமாகும். கவர்ச்சிகரமான மாளிகைகளும், செட்டிநாடு அரண்மனையும் வரலாறும் ஆச்சரியமும் கலந்த பின்னணியாக திகழ்கின்றன. தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள செட்டிநாடு, எண்ணற்ற சுற்றுலாத்தலங்களைக் கொண்ட ஒரு வரலாற்று நகரமாகும். ருசியான உணவு வகைகள், தனித்துவமான கட்டிடக்கலை, வளமான கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்காக தென்னிந்தியாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்றாகும். உங்கள் திருமணப் புகைப்படம் எடுக்க இதுவும் ஒரு நல்ல இடமாக அமையும்.
தஞ்சாவூர்பிரிஹதீஸ்வரர் கோவிலும் பெரிய அரணும் கொண்டுள்ள தஞ்சாவூர், தமிழர் கட்டிடக் கலையின் சின்னமாகும். அதுமட்டுமல்லாமல், தென்னிந்திய மதம், கலை மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றின் முக்கிய மையமாக தஞ்சாவூர் உள்ளது. பாரம்பரியமான திருமணப் புகைப்படங்களை எடுக்க விரும்புபவர்களுக்கு தஞ்சாவூர் ஒரு முக்கிய தேர்வாக கூறலாம்.
தரங்கம்பாடிதனிமை தவழும் தரங்கம்பாடி, அதன் டேனிஷ் காலனி கட்டிடங்கள் மற்றும் கடற்கரை அரண்மனையுடன், சரித்திரமும் ரோமாண்டிக் உணர்வுகளும் கலந்த ஒரு அழகிய புகைப்பட இடமாகும்.
முடிவுரை
மேலே உள்ள பதிவு உங்களுக்கு உதவியாக இருந்திருக்கும் என நம்புகின்றோம். திருமணம் என்பது இரு இதயங்களின் இணைவு. அந்த இணைவின் அழகை பிரதிபலிக்கும் இடங்களில் தமிழ்நாடு ஒரு சிறப்பு மிக்கது. தமிழ்நாட்டின் பல்வேறு திருமண புகைப்பட இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். இந்த அழகிய திருமண புகைப்பட இடங்கள் உங்கள் திருமணத்தின் நினைவுகளை மேலும் மேலும் சிறப்பாக்க உதவும். இந்த இடங்களின் பழமையான கலை மற்றும் இயற்கையின் அழகு உங்கள் புகைப்படங்களை விசேஷமானதாக்கும். புகைப்படம் எடுக்க இடமெல்லாம் சொல்றீங்க! ஆனா வரன் தான் இன்னும் அமையவில்லைனு கவலைப் படுகிறீர்களா? இனிமே கவலை வேண்டாம்!! நித்ரா மணமாலையில் உங்கள் ஜாதகத்திற்கேற்ற வரன்கள் உங்களுக்காக காத்துக் கொண்டுள்ளனர். இன்னும் ஏன் தாமதம்? உனடே இலவசமாக ரெஜிஸ்டர் பண்ணுங்கள்!! உங்கள் வாழ்க்கைத் துணையின் கரம் பிடியுங்கள்!!
Our Nithra Matrimony App
Nithra Matrimony is one among the best matrimonial service you could find, very simple and easiest one so far to get a better soulmate for your life, and it is user friendly and designed precisely for all the Tamil people who are searching for a partner, they can find out their ally from the matched list reliant on their bias. Use our Nithra Matrimony App to keep track of your beloved spouse hunt.- 📖What are the Best Matrimonial Sites in Tamil Nadu? Complete Guide on Top 10 Matrimonial site.
- 📖The most trusted second marriage matrimony site in Tamilnadu
- 📖Which is the safest and most trusted online matrimony website in Tamil Nadu?
- 📖Why matrimonial websites are most preferable way of searching life partners?
- 📖How to Protect Yourself from Online Matrimony Fake?
- 📖How to create Tamil matrimony profile?
- 📖Should we go with a matrimonial site or a marriage broker?
- 📖Tamil Hindu Matrimony Online: Finding A Soul Mate Was Never This Easy!
- 📖Choose your perfect second choice in the Right Remarriage Matrimonial Site
- 📖Paid Membership Vs Free Matrimonial Service
- View More
Nithra Matrimony is one among the best matrimonial service you could find, very simple and easiest one so far to get a better soulmate for your life, and it is user friendly and designed precisely for all the Tamil people who are searching for a partner, they can find out their ally from the matched list reliant on their bias. Use our Nithra Matrimony App to keep track of your beloved spouse hunt.