
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்...!!
Table of Contents
முன்னுரை
💝 நாம் அனைவரும் இந்த பூமியில் வாழ்வின் பாதையில் பயணித்தாலும், நமது இலக்கு, திசை மற்றும் நோக்கம் வேறுபட்டவை. இதை நாம் யாரும் மறுக்க முடியாது. நமது உடல் அசைவுகள், உள் மற்றும் உணர்வு இயக்கங்கள் அனைத்தும் இறைவன், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களால் வழிநடத்தப்படுகின்றன. ஒருவரது ஜாதகப்படி, பிறக்கும் நேரத்தில், எந்த நட்சத்திரத்தில், எந்த பாதத்தில் சந்திரன் நிற்கிறார் என்பது, ஒருவரின் ஜென்ம நட்சத்திரமாகும். இந்தப் பதிவில் கிருத்திகை அல்லது (கார்த்திகை) நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குண நலன்கள் மற்றும் பொதுப் பலன்களைப் பற்றிப் பார்ப்போம்.!! நீங்கள் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களா? இன்னும் வரன் அமையவில்லை? உங்கள் நட்சத்திரத்திற்குப் பொருத்தமான வரன்கள் நித்ரா மணமாலையில் காத்துக் கொண்டுள்ளனர். இன்றே பதிவு செய்யுங்கள்.
கார்த்திகை நட்சத்திரம்
💝 இருபத்தேழு நட்சத்திரங்களில் மூன்றாவது இடத்தை பெறுவது கிருத்திகை அல்லது கார்த்திகை நட்சத்திரமாகும். இந்நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான்ஆவார். கார்த்திகை நட்சத்திரத்தின் 1ஆம் பாதம் மேஷம் ராசியிலும் 2,3,4 பாதங்கள் ரிஷபம் ராசியிலும் இருக்கும். இது ஒரு பெண் நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் உடலில் 1ஆம் பாதமானது தலை மற்றும் கண்களையும், 2,3,4ஆம் பாதங்கள் கழுத்து, தாடை, முகம் போன்ற பாகங்களையும் ஆளுமை செய்கிறது.
குண அமைப்பு
💝 கார்த்திகை நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு தோஷம் இல்லை. மற்ற இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் சில தடைகளை சந்திக்க நேரிடும். நல்ல உடல் வலிமையும் புத்திசாலித்தனமும் உடையவர்கள். சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும், எதையும் வெளியில் சொல்லும் திறனும் உடையவர். ஆடம்பரமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவார்கள். அவர்களால் முடிந்ததைச் செய்வார்கள். கனவு உலகில் சஞ்சரிப்பது அவர்களுக்குப் பிடிக்காத ஒன்று. அவர்கள் தாய் மொழியிலும் நாட்டிலும் அதீத பற்று கொண்டவர்கள். சிரித்த முகத்துடன் இருந்தாலும் கூட சண்டையிடும் காதலர்கள். கடுமையாக வாதிடுவார்கள்.
குடும்பம்
💝 கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காதல் என்பது பிடிக்காத ஒரு விஷயம். திருமண வாழ்கையிலேயே இணக்கமாக நடந்து கொள்வார்கள். மனைவி பிள்ளைகளிடம் கூட விட்டு கொடுத்து போக மாட்டார்கள், ஆனால் அவர்களின் தேவைகளை நிறைவேற்றி பல கனவுகளுடன் குழந்தைகளை வளர்ப்பார்கள். அதீத தெய்வ பக்தியும் இவர்களுக்கு உண்டு. தனக்கென ஒரு பாதையை ஏற்படுத்திக் கொண்டு தனி வாழ்க்கையை வாழ்வார்கள். உணவு வகைகளை ரசித்தும் ருசித்தும் உண்பதில் வல்லவர்கள்.
தொழில்
💝 கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறரை வழி நடத்தி செல்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பலர் சிறந்த வழிக்கறிஞர்களாகவும், பள்ளி ஆசிரியர்களாகவும், கல்லூரி பேராசிரியர்களாகவும் பணியாற்றும் திறமை கொண்டவர்கள். மருத்துவ துறையிலும் சமூக சேவையிலும், நாட்டுக்காவும் பாடுபடுவதிலும் அக்கரை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். முழு சுதந்திரம் உள்ள இடத்தில் மட்டுமே பணி புரியும் ஆர்வம் இவர்களுக்கு இருக்கும். மற்றவர்களின் கட்டளைக்கு கீழ் படியக்கூடிய வேலையாக இருந்தால் அதனால் எவ்வளவு லாபம் வந்தாலும் ஒரு நிமிடத்தில் உதறித் தள்ளிவிடுவார்கள். உணவு, மற்றும் இரசாயணம், கராத்தே, குங்-ஃபூ போன்ற கலைகளிலும், சாரணர் இயக்கத்திலும் பங்கேற்கும் ஆர்வம் இவர்களுக்கு அதிகம் இருக்கும். ஒரு வேலையை கையில் எடுத்தால், நாளை செய்வோம் என்று எதையும் தள்ளிப் போடாமல் அந்தந்த காரியத்தை அவ்வப்போதே செய்து முடிப்பார்கள்.
நோய்கள்
💝 கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சற்று முன் கோபம் அதிகமிருப்பதால் இரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட நோய்கள் தாக்கும். இதய நோய், ஒற்றை தலைவலி உஷ்ணம் சம்மந்தப்பட்ட நோய்கள், கண்களில் கோளாறு காதுவலி போன்றவை உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியம் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
திசைப் பலன்கள்
💝 கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூரிய திசை முதல் திசையாக வரும். சூரிய திசை மொத்தம் ஆறு வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள திசை காலங்களை அறியலாம். சூரிய திசை காலங்களில் குடும்பத்தில் பல வழிகளில் முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும் குழந்தைக்கு உஷ்ணம் சம்மந்தப்பட்ட நோய்களும், குழந்தையின் தந்தைக்கு பல இன்னல்களும் ஏற்படும். சூரியன் பலம் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் பாதிப்புகள் குறையும்.
💝 சந்திர திசை இரண்டாவது திசையாக வரும். மொத்தம் 10 வருடங்கள் நடைபெறும். சந்திரன் சூரியன் சாரத்தில் சஞ்சரிப்பதால் முன் கோபம், முரட்டுத்தனம், தந்தை தாயுடன் கருத்து வேறுபாடு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். இருப்பினும், சுபர் பார்வை சேர்க்கையுடன் சந்திரன் இருந்தால் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
💝 செவ்வாய் திசை மூன்றாவது திசையாக வரும் 7 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் கல்வியில் முன்னேற்றமும் குடும்பத்தில் ஏற்ற இறக்கமான பலன்களையும் உண்டாகும்.
💝 4-வது திசையாக ராகு திசை 18 வருடங்கள் நடைபெறுவதால் நல்ல யோகத்தையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் கொடுக்கும்.
💝 குரு திசை 5-வது திசையாக வரும். குரு திசை காலங்களும் ஒரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். ஆறாவது திசையாக வரும் சனி திசை நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். மேலே கூறிய திசை காலங்களில் அதன் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று கேந்திர திரி கோணத்தில் அமைந்திருந்தால் நற்பலனை பெற முடியும். அப்படி இல்லையெனில் வாழ்வில் எதிலும் எதிர் நீச்சல் போட வேண்டியதாக இருக்கும்.
பொதுவான தகவல்கள்
💝 கார்த்திகை நட்சத்திரத்தை மார்கழி மாதத்தில் இரவு சுமார் 11.00 மணிக்கு உச்சி வானத்தில் காணலாம்.
💝 கார்த்திகை நட்சத்திரகாரர்களின் ஸ்தல விருச்சம் அத்தி மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்தால் நற்பலன்களை பெற முடியும்.
கார்த்திகை நட்சத்திரத்தில் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள் :
💝 கடன்களை பைசல் செய்ய, சிலம்பாட்டம் கற்க, சுரங்கம் வெட்ட, செங்கல் சூளைக்கு நெருப்பிட, துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள பழைய வாகனங்களை விற்க போன்ற காரியங்களுக்கு இந்த நட்சத்திர நாள் உகந்தது.
கிருத்திகை நட்சத்திரத்தில் செய்யக் கூடாதவைகள் :
💝 கடன் கொடுக்கல்-வாங்கல், பிராயாணம் செய்தல், ஆபரேஷன் செய்தல் போன்றவைகளை கூடாது.
அதிர்ஷ்ட கல் :
💝 ரூபி.
சாதகமான நிறம் :
💝 சிவப்பு, காவி.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
💝 முருகப்பெருமான், சிவபெருமான்.
அணிய வேண்டிய நவரத்தினம்:
💝 மாணிக்கம்.
கிருத்திகை நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள் :
💝 உத்திரம், புனர்பூசம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் ரச்சு பொருத்தங்கள் பொருந்தாது. எனவே, இந்த நட்சத்திரக்காரர்களை திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
வழிபாட்டு ஸ்தலங்கள்
💝 திண்டிவனம் அருகில் உள்ள மயிலம் முருகப் பெருமானை வியாக்கிழமைகளில் வணங்குவது நல்லது. பொதுவாகவே முருகன் குடிகொண்டிருக்கும் அனைத்து ஸ்தலங்களையும் வழிபடலாம்.
கூற வேண்டிய மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா ஸேனாய தீமஹி
தந்றோ ஷண்முக ப்ரசோதயாத்
முடிவுரை
💝 மேலே கொடுக்கப்பட்டுள்ள கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம். இரு மனங்கள் இணையும் இனிய தருணமே!! திருமணம் ஆகும். திருமணத்திற்கு வரன் தேடுவதற்கு முதல் தேர்வு நித்ரா மேட்ரிமோனி. உங்கள் வாழ்க்கைத்துணை உங்கள் கைவிரல் நுனியில் இருக்கின்றனர். உடனே இலவசமாக பதிவு செய்யுங்கள்!!

Our Nithra Matrimony App
Nithra Matrimony is one among the best matrimonial service you could find, very simple and easiest one so far to get a better soulmate for your life, and it is user friendly and designed precisely for all the Tamil people who are searching for a partner, they can find out their ally from the matched list reliant on their bias. Use our Nithra Matrimony App to keep track of your beloved spouse hunt.- 📖What are the Best Matrimonial Sites in Tamil Nadu? Complete Guide on Top 10 Matrimonial site.
- 📖The most trusted second marriage matrimony site in Tamilnadu
- 📖Which is the safest and most trusted online matrimony website in Tamil Nadu?
- 📖Why matrimonial websites are most preferable way of searching life partners?
- 📖How to Protect Yourself from Online Matrimony Fake?
- 📖How to create Tamil matrimony profile?
- 📖Should we go with a matrimonial site or a marriage broker?
- 📖Tamil Hindu Matrimony Online: Finding A Soul Mate Was Never This Easy!
- 📖Choose your perfect second choice in the Right Remarriage Matrimonial Site
- 📖Paid Membership Vs Free Matrimonial Service
- View More
Nithra Matrimony is one among the best matrimonial service you could find, very simple and easiest one so far to get a better soulmate for your life, and it is user friendly and designed precisely for all the Tamil people who are searching for a partner, they can find out their ally from the matched list reliant on their bias. Use our Nithra Matrimony App to keep track of your beloved spouse hunt.